Thursday, December 24, 2009

உன் நினைவுகளின் துணையோடு......


உன்னை பிரிந்து
நாட்கள் கடந்து இருக்கலாம்
உன்னை மறந்து
ஒரு நிமிடமேனும் கடக்காது…..
இன்றுவரை உன்னை பிரிந்து
எத்தனையோ நாட்கள்
கடந்து விட்டேன்
உன் நினைவுகளின் துணையோடு.....

ஒரு பக்கம் நினைத்து பார்த்தால்
வேதனையாய் இருக்கிறது
மறு பக்கம் பார்த்தால் ஏனோ
மனம் அதையே விரும்புகிறது…

உறக்கம் முடிந்தாலும்
கனவுகள் மட்டும்
தொடர்கின்றது....
ஒரு வழியாய் கனவை
கலைத்து விடுவேன்
ஆனால் நினைவை
நான் நினைத்தாலும் ...
கலைக்க முடியாது….

உன் நினைவுகளை
சுமந்து கொண்டு
இருக்கும் இதயம்
உனக்கே சொந்தம்
வேறு பெண்ணையும் நினைக்காது....
உன் நினைவுகளின்
துணையோடு காலம் க
டப்பேன்.....!!

Wednesday, December 16, 2009

உன் அணைப்பினால் அழகாகிறேன்



மெல்லிய மழைச்சாரல்
ஜன்னல் வழியே தெறிக்க
பின்னிரவின் குளிரில் உன்னை
இறுக்கி அணைத்தபடியே
படுத்திருக்கும் அந்த சுகம்
மரணத்தின் விளிம்பு வரை நீளும் வரம் வேண்டும்.

எத்தனை வேதனைகளை
சுமந்தபடி வந்திருந்தாலும்,
உன் இறுகிய அணைப்பினால்
அத்தனை வலிகளையும் அழித்துவிடுகிறாய்.

இருவரும் அணைத்தபடி
படுத்திருக்கும் சுகத்தைவிட,
நீ என்னிடம் கோபித்துக் கொண்டு
எனக்கு எதிர்புறமாய் திரும்பியபடி
படுத்திருக்கும் நேரத்தில்,

மெதுவாய் உன் பின்னால் இருந்து
அணைத்துக் கொள்ளும் அந்த சுகம்
எனக்கு மிகப் பிடித்தது.
அப்போது மெதுவாய் உன் விரல்கள்
என் விரல்களை
சிறைப்பிடித்துக் கொள்ளும்.

அந்த ஒரு நொடியில்
இதுவரை என்னிடம்
நீ கொண்ட கோபம் எங்கே போயிற்று?
என்று கண்டுபிடிக்கும் பொறுப்பை
இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தால் கூட
அவர்களால் கண்டுபிடிக்க முடியாது.

உனக்கு புத்துணர்ச்சி தேவைப்படும்
நேரங்களில் காஃபி குடிக்கிறாய்.
எனக்கு புத்துணர்ச்சி தேவைப்படும்
நேரங்களில் உன்னை
கட்டிப்பிடித்துக் கொள்கிறேன்.

உன்னை அறியாமல்
உன் தூக்கத்தின் இடையே
என் அருகே வந்து நீ என்னை
அணைத்துக் கொள்ளும்
அந்த சுகத்தை அனுபவிக்க வேண்டும்
என்பதற்காகவே இரவு முழுவதும்
துங்காமல் விழித்திருப்பேன்.

எனக்கு தேவை
உன் முத்தங்கள்தான்.
ஆனால் அதை நேரிடையாக கேட்பதைவிட,
உன் அணைப்பை மட்டும்தான் கேட்பேன்.
ஒன்று வாங்கினால்
ஒன்று இலவசம் என்பது போல்,
நீ உன் அணைப்போடு சேர்த்து
உன் முத்தங்களையும்
இலவசமாக தருகிறாய்.

நீ அணைக்கையில்
உன் கழுத்தோரம் மணக்கும்
வாசனைக்கு இணையான பெர்ஃயூம்,
இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை.

தூக்கத்தைவிட,
கனவுகளைவிட,
உன் அணைப்பையே
அதிகம் விரும்புகிறேன்

நீ மட்டும் என்னை
அணைத்து கொண்டு இருப்பாயேயானால்
ஆயுள் முழுவதும் உன் அருகில்
தூங்கிக்கொண்டு இருப்பேன்.

நேற்று இறந்து விட்டேன்




சற்றே வியந்துதான் போகிறேன்
உன் மனதின் நிறம் மாறும்
குணத்தை எண்ணி....

அளவில்லா ப்ரியங்களுடன்
அணுஅணுவாய் என்னை காதலிக்க
முடிந்த உன்னால் எப்படி இன்னொரு
இதயத்தையும் காதலிக்க முடிந்தது?

நேற்று விளையாட்டாய் உன் கைப்பேசியை
எடுத்துப் பார்க்கையில்தான் என் மனம்
தற்கொலை செய்துகொண்டது.

எனக்கு மட்டுமே சொந்தமான
உன் Sent items' ல் யாரோ ஒருவருக்கு
நீ அனுப்பிய ஐலவ்யூக்களும், உம்மாக்களும்
என்னுள் ஏற்படுத்திய வலியை
உன்னால் உணரக்கூடுமா?

என் குரல் சேமித்து வைக்கப்பட்டிருந்த
உன் ரெக்கார்டிங்கில் இப்போது
இன்னொருவர் குரல்...
உன் தொலைபேசியில் இருந்த என்
அத்தனை புகைப்படங்களும் எங்கே போயிற்று?
உன்னால் பதில் சொல்ல முடிகிறதா?

என் முன்னாலே நீ உன் புதுக்காதலுடன்
சிரித்து பேசுகையில் நொடிக்கொருமுறை
உன் காதலின் நினைவுகளால்
கற்பழிக்கப்படுகிறேன்.
இறைவா என் எதிரிக்கும் வேண்டாம்
இப்படி ஒரு வேதனை.

எனக்கு நிச்சயமாய் தெரிகிறது
உன் ஸ்பரிசங்களும், உன் முத்தங்களும்
இனி இன்னொருவருக்கு தான் சொந்தம் என்று...
மூளைக்கு புரியும் இந்த உண்மையை
மனம் அடம்பிடித்து ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

உன் வாசம் படிந்த கைக்குட்டை..
உன்னுடன் கண்டு களித்த சினிமா டிக்கெட்..
ஓயாமல் சிரிக்கும் உன் புகைப்படம்..
காதலுடன் நீ வரைந்த கிரீட்டிங் கார்ட்
என உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டே
இருக்க வேண்டும் என நான் பத்திரப்படுத்திய
உன் நினைவுகள் அனைத்தும் வெறும்
நினைவுச் சின்னங்களாக மட்டுமே இருக்கும் என
சத்தியமாய் நினைக்கவில்லை...



என் வசந்த காலத்தின்
ஒரு பக்கத்தை முற்றிலும்
இலையுதிர் காலமாய் செய்தாய்.

மனம் வலிக்கும் நேரங்களில்
உன் நினைவுகள் மட்டுமே சுகமாய் இருக்கும்.
ஆனால் இன்றோ என் மனவலிக்கு
முழுமுதற் காரணமும் நீயாய்...

அழுவது அவமானச் சின்னம்
என்பது என் கொள்கை.
ஆனால் இன்றோ என் கண்ணீர்
சுரப்பிகள் கூட வற்றிவிட்டன.

தற்கொலை செய்துகொள்வது
கோழைத்தனத்தின் உச்சம் என நினைத்திருந்தேன்.
கண் முன்னே இப்படி ஒரு வலியை
உணர்கையில்தான் தோன்றுகிறது
தற்கொலை பாலைவனத்தில் நீரைப்போல்...

உன் மனதின் கொடூரத்தை தாங்க இயலாமல்
ஒரு நொடியில் மணிக்கட்டை
கூரிய பிளேடால் அறுத்துக் கொண்டேன்.
நீ கொடுத்த வலியைவிட அது ஒன்றும்
வேதனை நிறைந்ததாய் இருக்கவில்லை.

என் காதல் நரம்புகளை அறுத்துவிட்டு,
நீ வீணை வாசிக்கிறாய்.
என் சந்தோஷ சிறகுகளுக்கு தீ வைத்துவிட்டு,
நீ குளிர்காய்கிறாய்.

யாரை நோக்கியோ உன் பார்வைகள்.
குருடாய் போனது என் உலகம்.
யார் பெயரையோ உச்சரிக்க தயாராய் உன் இதழ்கள்,
ஊமையாகிப் போனது என் தேசம்.

என் SMS சேமித்து வைத்திருப்பாய்.
எதற்கு என்று கேட்டால்,
உன் நினைவுகள் வரும் போது
எடுத்து படித்து கொள்ள என்பாய்..
இப்போது உன் Outbox' ல் கூட என் SMS இல்லை.
ஏன் இப்போதெல்லாம் என் நியாபகம்
உனக்கு வருவதில்லையா?

நான் அனுப்பிய
சில காதல் மெசேஜ்களையும்,
படங்களையும் சேமித்து வைத்திருந்தாய்.
சில நொடிகள் சந்தோஷப்பட்டது என் மனம்.

பிறகுதான் தெரிந்து கொண்டேன்
யாரோ ஒருவருக்கு Forward செய்ய அதை
எல்லாம் நீ பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாய் என்று..
"மனம் மரணமடைந்தது" என்ற ஷெல்லியின்
வார்த்தையை அனுபவித்து உணர்ந்தேன் அன்று..

வாழ்ந்துகாட்டு! வாழ்ந்துகாட்டு
என்று என் உறவுகள் எனக்கு
ஆறுதல் சொல்கின்றனர்.
இனி நான் எத்தனை கோடிகள் சம்பாதித்தாலும்
நீ எனக்கு கொடுத்த அந்த காதலை
என்னால் சம்பாதிக்க முடியுமா?

என்னதான் நான் பென்ஸ் காரிலே வந்து
உன் முன்னால் இறங்கினாலும்
உன் துணையுடன் உன்னை பார்க்க நேர்கையில்
என்னால் சிரிக்க முடியுமா?

வேறு யாரை நான் கட்டி அணைத்தாலும்
அந்த அணைப்பில் உன் வெப்பத்தை
என்னால் மறந்துவிட முடியுமா?

எத்தனையோ அழகான கவிதைகளை
என்னை எழுத தூண்டியது நீதான்.
இன்று துயரங்களையும் சுமக்கும் பக்குவத்தை
எனக்கு தந்து இப்படியும் கவிதைகள் எழுதலாம்
என புதிய அனுபவத்தையும் எனக்கு கற்று தந்தாய்.
உனக்கு நன்றி.

என் பெயர் சொல்லி அழைக்க மறந்து,
யாரோ ஒருவர் பெயரை சொல்லி நீ அழைத்தாய்,
அந்த ஒரு நொடியில் லேசாய் உதடு கடித்து
ஒற்றை வார்த்தையில் "சாரி" என்று
சொல்லிவிட்டு போய் விட்டாய்.
நேற்றே நான் இறந்து விட்டேன்.

Friday, December 11, 2009

தொலைத்த முத்தங்கள்.......


அவசரம் எதற்கு..
பொறுமையாக கூட்டிக்கொண்டேவா ,
வெட்கத்தின் வளைவுகளில்
பூத்திருக்கும் முத்தங்களையும்..!

என் மௌனங்களனைத்தும்
நொறுங்கி எழுகிறது..
உன் முத்தங்களின் புன்னகையில்..!

பிழையாயிருந்த எனதுயிர்
தப்பி பிளைக்கிறது
நீதரும் முத்தங்கள்முன்..!

என் காதல்
அர்த்த செறிவுடையதாகிறது
உன் முத்தங்களுக்கு
கோடி நன்றிகள்..!

என் வாழ்வியலை
சாதலில் ,
உன் முத்தம்தான்
நிரப்புகிறது..!

தொலைத்த முத்தங்கள்..
உனக்கான காத்திருப்புகளில் ,
தேடி கொடு..!

எழுதிய முத்தங்கள் நூறு
இருத்தல் அமைந்தாலும்
எழுதாத முத்தங்களில்..
நீ..இன்றுமென்ற
ஒரே வருத்தம்தான்
என் உறக்கம் தொலைக்கின்றது..!

துவங்கும் பொழுதினிலேயே
முடிந்தும் விடுகிறது
என் கவிதைகளனைத்தும்
உன் முத்தங்களின்முன்..!

நான் தவறவிட்ட முத்தங்களை
இன்னும் உன் ,
கன்னக்குழியில் தானே..
ஒளித்துவைத்திருக்கிறாய்..!

எங்கே விழுந்திருக்கும் - என் இதயம்..!!!!!!


இடை விடாது நீ பேசும்
வார்த்தையின் வரிசையிலா..?

இல்லை வார்த்தைகள்
ஓய்வெடுக்கும் இடைவெளியில்
வந்து போகும் அந்த மெல்லிய புன்னகையிலா..?

இதயம் களவாடும் வித்தைக் கற்ற
உன் கண்களிலா..??

இல்லை என்னை கவி எழுத
வைக்கும் உன் காதலிலா..??

இதுவரையில் தென்றல் மட்டுமே..
தீண்டி சுகம் பெற்ற.....
உன் கட்டழகு மேனியிலா..??

இல்லை புன்னகையோடு வார்த்தை
கலந்து பேசும் உன் புதுமையான பேச்சிலா..??

இல்லை எங்கோ வரும் என்னை இருந்த
இடத்திலிருந்தே தாக்கும் உன் கண்களின் வீச்சிலா..??

பருவம் சுமந்து வரும் உன் பேரழகிலா..??

பாவை உன் பாதம் நடந்த திருவீதியிலா..??

எங்கடி விழுந்திருக்கும் என் இதயம்
தெரியாமல் விடியல் காண மறுக்குது என் உதயம்..!!!

கண்டெடுத்தால் தந்து விடு...!!!
இல்லையேல் அதற்கும் சேர்த்து
நீயே காதல் பாடம் கற்று கொடு..!!!!