உன்னிடம் சொல்லிவிட்டேன் என்ற எண்ணத்தில் நான் இருப்பதை விட.. நீ என்னை இன்னும் ஏற்றுகொள்ளவில்லை என்கின்ற துக்கத்திலேயே என் இதயம் இறந்துபோகிறது தினமும்..
வாழ்வின் சுவையை உன்னில் அறிய முயன்றேன் இன்று... கண்ணீரின் சுவையை அறிந்துகொண்டேன்.. காதலும் கடலும் ஒன்று தான். கடலில் முழ்கி முத்தெடுப்பது போல தான் காதலும்.
உன்கண்கள் கண்டேன் என் இதயம் தொலைத்தேன்... உன்கைகள் என்கன்னம் தழுவிய போது அன்பை உணர்ந்தேன்.. நீ என் அருகில் இருக்கும் போதெல்லாம் என் நெஞ்சில் சாரலை.. இருந்தாய் இன்று தூரமாய் சென்றுவிடவே என் நெஞ்சம் பாரமாய் அவதேனடி..
உன் காதுமடலை கலைவடித்த அந்த பிரமனுக்கு எப்படி நன்றி சொல்லுவேன்.. உன் செவ்விதழின் சிவந்த நிறத்தை பார்த்து ரோஜா கூட தவம் கிடக்கும். தன் இதழில் வண்ணம் சேர்க்க.
உன்னருகில் நின்றபோது இடமாறதுடிக்கும் என் இதயம் கரை தீண்டும் அலை போல உன் இதயத்தை வந்து வந்து செல்கிறதே!
என் கன்னத்தை உன் இதழால் ஈரமாக்குவாய் என்று நான் கனவு கண்டபோது ஈரத்தை உணர்ந்தேன் உன் முத்தத்தால் அல்ல என் கண்கள் விட்ட கண்ணீரால்
உன் பக்கத்தில் நிற்க்கவே வெகுநேரம் நின்றேன் வெகுநேரம் நின்றும் உன் மௌனம் மலராத மொட்டகவே இருந்தன.. உன் இதழ் பார்த்தே என் பூக்கள் எல்லாம் வாடிபோனதடி..
பூக்களை கூட நேசிக்காதவன் உன்னை பார்த்தும் நேசிக்க தொடங்கினேன்........ பூக்களின் மென்மையை அறியாதவன் உன்மனதின் மென்மையை அறிந்தேன்.. விழிகூட கேட்கிறது கண்ணீர் வரும் நேரங்களில் உன் மடிவேண்டுமென்று,,,,,,,,,,, என் விழிமூடுமுன் வந்துவிடு உன்முகத்தை பார்த்தேன் விடைபெறுகிறேன்.. உன்னை விட்டு அல்ல இந்த மண்ணை விட்டு......
விழிகள் வழியாக இதயத்தில் போர் தொடுத்து என் காதல் சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தை வீழ்த்தியவளுக்கு...
இந்த உலகத்தில் என்னை இன்னமும் வாழவைத்துக் கொண்டிருக்கும் உன் நினைவுகள்தான் என்னை தினம் தினம் கொல்லவும் செய்கின்றன...
என் மூச்சு ஒரு நாள் அதன் முகவரி தேடி வரும் அப்போதாவது திறந்து வை உன் இதயத்தின் கதவுகளை..
உன்னோடு பார்க்கவேண்டிய உலக அதிசயங்கள் எல்லாமே எங்கே என் அதிசயம் என்று கேக்கிறது அதற்கு எப்படித் தெரியும் உன்னை நான் சுற்றிச் சுற்றி ரசிப்பது...............
உன் நட்புக்காக இதயத்தில் இடம் கொடுக்க பலர் உன்டு.....
உன் நட்புக்காக இதயம்... கொடுக்க நர்ன் மட்டும் உன்டு.......
சாகடிக்கபடலாம் .... ஆனால் நான் தோற்க்கடிக்க படமாட்டேன்
காதலிக்கும்போது புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாது!!!!
என் கல்லறை வரும் வழியெங்கும் முட்களை தூவுங்கள்.... ஒருவேளை அவளின் கண்ணீர்பட்டு என் காதல் உயிர்த்தெழலாம் எனக்கு விருப்பமில்லை மீண்டும் இறந்துவிட... மரித்தகாதல் மரித்ததாயிருகட்டும்....