
இன்று..
ஊரெல்லாம் பௌர்ணமி..
எனக்கு மட்டும் அமாவாசை..!
இன்று மட்டும்
ஏனோ..
என் வார்த்தைகள்
வாக்கியமாவதை மறுக்கின்றன..
கருத்துக்கள்..
கவிதையாவதை வெறுக்கின்றன...!
பெண்ணே..
நெருப்பென்பதை அறிந்தும்
விட்டில் பூச்சிகள்
விளக்கைச் சுற்றுவது
வாழ்க்கையை வெறுப்பதால் அல்ல...
என்றாவது ஓர் நாள்..
அந்த நெருப்பும்
நீர் வார்க்கும்
என்ற நப்பாசையால்தான்..!!
இற்றுவிட்ட இதயத்தில்
இன்னும்
கொஞ்சம் வலுவிருக்கிறது..
காரணம்..
உன் நினைவு
இன்னும் அதில் இருக்கிறது..
மறந்துவிட முயற்சித்தேன்..
இறந்துவிடுவேன் என்பதால்
மறப்பதை மறந்துவிட்டேன்..!!!
காமம் கடந்து
காதல் சுமந்தேன்..
ஈமச் சடங்கின் விறகானேன்..
காதல் கடந்து
காமம் சுமந்தேன்..
வீசும் காற்றில் சறுகானேன்..!
பிறந்தது நிஜம்..
இறப்பதும் நிஜம்..
வாழ்க்கை மட்டும் மாயம் பெண்ணே..
உன்னை
நினைத்தது நிஜம்..
அனைத்தது நிஜம்..
காதல் மட்டும் காயம் கண்ணே..
No comments:
Post a Comment