Monday, September 21, 2009

ஒரு காதல் கவிதை


"காதலின் கால நகர்தல்"

ஒரு சின்ன புள்ளியாய்
உன் -
கருவிழியிலிருந்து
நினைவுருகிறது நம் காதல்!

உனக்குள் நானாகக்
கரைந்த - அந்த நாட்கள்
இன்னும் வலிப்பதாகவே கடக்கின்றன;

தெருக்களின் நீளத்திலெல்லாம் - என்
ஆயுளை - உன் - வருகைக்காய்
பதித்து வைத்திருந்த காலமது;

உடல் உரசா தூரத்தில் - இதயங்கள்
இரண்டும் ஒன்றென சங்கமித்திருந்த
அந்த வேளையில் தான் -

நேரம் காலம் நட்சத்திரம் - பார்த்தடிக்கப்
பட்ட உன்-
திருமண அழைப்பிதழில் -
முதல் முதலாய் நம் பிரிவும்
நிரந்தரமாய் அறிவிக்கப் பட்டன;

எப்படியோ சேர்ந்தே விடுவோமென்றிருந்த
மிச்சம் மீதி நம்பிக்கையும் -
யாரோ உனக்குப் போட்ட
மூன்று முடுச்சுகளில் அவிழ்ந்து போனது;

உண்மையில் -
உனக்கு எத்தனை வலித்ததோ -
தெரியவில்லை, எனக்கு இன்றுவரை
வலியாகவே 'மறக்க மறுக்கிறது - நம்
காதல்!

இதோ அம்மாவாகியும் விட்டாயாம்;
நீ -
அம்மாவாகிவிட்ட வெற்றியில் தோற்ற - நம்
இதயத் தெருக்களில் - இனி எந்த ஜென்மம் வந்து
சிரிப்புக் கோலமிடுமோ; இட்டுபோகட்டும்,

இப்பொழுதும்;
உன் குழந்தையின் சப்தத்திற்கு இடையேயும்
உன் கணவனின் அரவணைப்பிற்கு பிறகுமாவது -
ஏதோ ஒரு சின்ன சிலிர்ப்பை -
எனக்காக உன் இதையம் உணராமலா இருக்கும்???

உனக்கெப்படியோ;
நாட்கள் கடக்கும் விளிம்புகளில்..
உன் சிரிப்பும் நினைவுகளுமாகவே
என் வாழ்நாட்கள் உதிர்கின்றன;

உனக்காக காத்திருந்த காத்திருப்புகளிலும்
அழுத கண்ணீரிலும் - காதலை கற்றளவு
உன்னை நானும் -
என்னை நீயும் -
கற்றுக் கொள்ளவில்லை என்பதே நிஜம்!

என் நெஞ்சில் பச்சை குத்திய - உன்
பெயரிலிருந்து -
விழித்தே கழித்த என் இரவுகள் வரை
ஒன்றாக உனக்குத் தெரிந்திருக்குமா???

இரவின் நெடுநேரம் வரை
உன் வீட்டு வாசலில்-
நான் நின்றிருந்ததும்..,

நான் நிற்ப்பேனென நீ - உன் படுக்கையில்
அழுதுத் தீர்த்தும்..,

மறுநாள் காலை -
விடியலில் எழுந்து நீ
வாசல் தெளித்தும்..,

உன் வாசலின் ஈரமாய் - என்
இதயம் கனத்ததுமாகவே........
நகர்கிறதென் காலம்!!

பிப்ரவரி 14



இன்று..

ஊரெல்லாம் பௌர்ணமி..

எனக்கு மட்டும் அமாவாசை..!

இன்று மட்டும்

ஏனோ..

என் வார்த்தைகள்

வாக்கியமாவதை மறுக்கின்றன..

கருத்துக்கள்..

கவிதையாவதை வெறுக்கின்றன...!

பெண்ணே..

நெருப்பென்பதை அறிந்தும்

விட்டில் பூச்சிகள்

விளக்கைச் சுற்றுவது

வாழ்க்கையை வெறுப்பதால் அல்ல...


என்றாவது ஓர் நாள்..

அந்த நெருப்பும்

நீர் வார்க்கும்

என்ற நப்பாசையால்தான்..!!


இற்றுவிட்ட இதயத்தில்

இன்னும்

கொஞ்சம் வலுவிருக்கிறது..


காரணம்..

உன் நினைவு

இன்னும் அதில் இருக்கிறது..


மறந்துவிட முயற்சித்தேன்..

இறந்துவிடுவேன் என்பதால்

மறப்பதை மறந்துவிட்டேன்..!!!

காமம் கடந்து

காதல் சுமந்தேன்..

ஈமச் சடங்கின் விறகானேன்..


காதல் கடந்து

காமம் சுமந்தேன்..

வீசும் காற்றில் சறுகானேன்..!


பிறந்தது நிஜம்..

இறப்பதும் நிஜம்..

வாழ்க்கை மட்டும் மாயம் பெண்ணே..


உன்னை

நினைத்தது நிஜம்..

அனைத்தது நிஜம்..

காதல் மட்டும் காயம் கண்ணே..

ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம்


ஆம்!
அரைமணிநேர -
மின்சார அணைப்பில் தான்-
சுடர் விட்டு எரிந்தது
நம் காதல்;

"இருட்டில் என்ன
செய்கிறாய் - போ.. போயி
ஒரு மெழுகுவர்த்தி
வாங்கி வா" என்றாள் அம்மா.

மெழுகுவர்த்தி
வாங்க வந்த கடையில்
நீ -
மெழுகுவர்த்தி கொடுக்க

மனசெல்லாம் மின்சாரமும்
பாய்ந்தது;

சிரித்த உன் முகத்தையும்
நானுன்னை -
ஏனோ அப்படி பார்த்ததையும்
நீயும் ரசித்து விட -

தெருவெல்லாம் அசைபோட்ட
உன் நினைவில் -
மெல்ல வந்தது
காதல் ஆசை!

மறுநாள் விளக்கணைந்த போது
அம்மா சொல்லவில்லை -
நானாகவே கடைக்கு வந்தேன்,

நீ சிரித்தாய்..

"ஒரு மெழுகுவர்த்தி கொடு
என்றேன்;

கொடுத்தாய்..,

எனக்கு போக
மனம் வரவில்லைதான்-

"ஏன் வேறேதாவது வேண்டுமா
என்றாய்.,

"ஆம்., உன் மனது
வேண்டும்;
(மனதில் நினைத்துக் கொண்டேன்)

"என்ன?

உன் மனது
வேண்டும்;ஒருமுறை என்னை காதலிப்பாயா?

"என்ன வேணும்
ஏனப்படி பார்க்கிறாய்
என்றாய்.,

"இவ்வளவு அழகாய்
இருக்கிறாயே,
பார்க்காமல் என்ன செய்ய..

"அப்பா வரார் சொல்லு
என்ன வேணும்.,

உன் இதயம் வேணும்
ஒரேஒரு முறை
கொடேன்;

"என்ன தம்பிக்கு
என்ன வேணுமாம்;(அப்பா கேட்டார்)

"மெழுகுவர்த்திப்பா;
மெழுகுவர்த்தி வேணுமாம்..!!

"ஆமா.. அண்னாச்சி
மெழுகுவர்த்தி தான்
வேணும்.,

உன் மகளின் மனசென்று சொல்ல
தைரியம் -
வரவில்லை; எனக்கு.

வெறும் காதல் வந்தவனாய்
அவளை திரும்பி திரும்பி
பார்த்துக் கொண்டே வந்தேன்.,

'அப்பா வரார் சொல்லு
என்ன வேணும்' என்றாளே
அப்பா வரார் சொல்லு என்றாளே..

மனசு இரவெல்லாம் -
விளக்கனையுமா..
மீண்டும் மின்சாரம் போகுமா.. என
யாருக்கும் தெரியாமல்
பற்றிக்கொண்டு எரிந்தது;

மறுநாள் காலை எழுந்ததும்
"அம்மா கடைக்கு போகனுமா?

"ஏண்டா கேட்குற
அதலாம் வேணாம் -
நீ போ;போயி..படி

"போடி மோசக்காரி -
உனக்கென்ன தெரியும் என் காதல் பற்றி..

அம்மாவை திட்டுவிட்டு
உன் வீட்டு தெருவெல்லாம்
வந்து என் காதல் பூ
தூவினேன்;

உன் அப்பா என்னை
முறைத்த பார்வையை கூட
என் காதல் பக்கத்தில் -
வெற்றிக்கான குறிப்புகளென
எழுதிக் கொண்டேன்;

போகும் போதும்
வரும்போதும் -
நீ என்னை பார்க்கிறாய் என்று தெரிந்த
உன் ஒரு -பார்வைக்காய்
என் நாட்களை எல்லாம் உன்
கடை வாசலில் குவித்து
காதலி காதலி என்று கெஞ்சினேன்;

உனக்குத்தான் அதெல்லாம் புரியாமல்
சில்லரைகளோடு என் இதயத்தையும்
வாங்கி - உன்
கல்லாபெட்டியில் -
போட்டுக்கொண்டாய்;

'மோசக்காரி..
மோசக்காரி..,
திட்டிக் கொண்டே வீட்டிற்கு
வந்தேன்;

மின்சாரம் நிற்க,
விளக்கு அணைய..,
உள்ளே -
காதல் பூக்கள் பூக்கத் துவங்கின;

அம்மா நான் மெழுகுவர்த்தி வாங்கியாறேன்..

ஓடி வந்த ஓட்டத்தில்
மூச்சிரைக்க -
உன் கடை முன் வந்து நின்று
இருட்டிற்குள் எரியும் உன்
முக வெளிச்சத்தில்
அசந்து நிற்க-

"என்ன வேண்டும்?

"ஒரு மெழுகுவர்த்தி!

கொடுத்து விட்டு நீ-
அப்-புரம் திரும்பிக் கொண்டாய்;

என்னால் அங்கிருந்து நகர
முடியவில்லை,

அதற்குள் நீ-

"என்னவேண்டும்?

"மெழுகு வர்த்தி!

நீ-
மீண்டும் கொடுத்துவிட்டு என்னை பார்த்தாய்..
நான் அங்கிருந்து நகரவே இல்லை..

மீண்டும் நீ-
"என்ன வேண்டும் என்றாய் -
ஒன்றுமே தெரியாததை போல;

"இன்னொரு மெழுகுவர்த்திக் கொடு!

"அதான் இத்தனை வாங்கி
விட்டாயே இன்னுமெதற்கு
மெழுகுவர்த்தி???

"அப்போ உன் -
காதல் கொடு!!

"என்ன????

"உன் காதல் வேணும்-
என்னை காதலியேன்' என்றேன்.

"அப்பா..
அப்பா..
நீ கத்த, அப்பா ஓடிவர..

என்னவென்று விவரமறிந்து
என்னை-
தரதரவென்று என் வீடுவரை
இழுத்துவந்து அடித்து -
வீட்டின் வாசலில்
வீசிவிட்டு -

தெருவெல்லாம் என்னை
திட்டித் தீர்க்க குத்தகை
எடுத்தவரை போல
கத்திக் கொண்டே போக;

அவுமானத்தால் அம்மா கதறியழுது
என்னை வெளியே போடாவென
விரட்டியதில் -

நான் -
வெளியே வந்து நின்று
உன் கடை இருக்கும் தெருவை
பார்க்கிறேன்....,

நீ அங்கே எங்கோ
தொலைதூரம் நின்று

வருத்தத்துடன் என்னை பார்க்கிறாய்;

என் கண்கள் சற்று
கலங்கியது தான்,

கலகங்கட்டும்;

அதோ..
என் கண்ணீர் வழியே -
தரை தொட்ட என் காதல்
வருத்தங்களாய் -
உனக்குள்ளும் பூக்கிறது பார்!!

Saturday, September 19, 2009

கொஞ்சம் உயிரும் ..... காதலென சொல்லப்படுவதும்


உயிரின் கடைசி துகள்கள்
என்னை நீங்கத் தீர்மானித்த பொழுதில்
காற்றின் கரங்களை பற்றிக்கொண்டு
காலத்தின் கைபிடிக்குள் சிக்காது மீட்டு
மலைமுகட்டில் ஒரு கழுகுக்
கூட்டை என் இருபிடமாக்கினாய்

புள்ளியாய் மட்டுமே நீ தோன்றக் கூடிய தொலைவில்
புறப்படத் துவங்கிற்று என் பிரியத்தின் பிரவாகம்

உன் சுவாசத்தின் நெடி அறிய
புழுவாய் நெளிந்து நெருங்கவே
பறந்து விலகி உனக்கான தாகம் கூட்டினாய்

உன் நெருக்கத்தின் வெம்மை கிடைக்காது போயினும்
உன்னைப் பற்றிய அனுமானங்களோடு
பயணிக்கத் துவங்கினேன்
காதலின் ஆபத்தான பள்ளங்களில்

அறிவிப்பற்ற மழையாய் நீ என்னை
நனைக்கத் தொடங்கிய பொழுதில்
உனக்கான தாகம் வற்றத் துவங்கி
உன் இருத்தலை பெருந்துயராக்கிப் போனது

உன்னைகாட்டிலும் போலியானது
என் காதலை கொழுத்து வளரவிட்ட
உன்னைபற்றியதான என் அனுமானங்கள்

என் அனுமானங்களுக்கு
உயிர் இருந்திருக்கலாம்
நான் மிஞ்சி இருக்ககூடும் ..

நட்பும் காதலும்......


என்னிடம் இருந்த
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக
ஒரு இதயத்தையே
பரிசளித்தது நட்பு!

கஷ்டங்களில்
யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கைகொடுத்தது நட்பு!

துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!

கட்டுப்பாடுகளை
தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்த்த முயற்சித்தது நட்பு!

என் இலட்சியங்களை
கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!

காயம் தரும்
காதல் வேண்டாம்!
நன்மை தரும்
நட்பைக்கொடு இறைவா!

Wednesday, September 2, 2009

உன்னிடம் சொல்லிவிட்டேன்...........


உன்னிடம் சொல்லிவிட்டேன்
என்ற எண்ணத்தில்
நான் இருப்பதை விட..
நீ என்னை இன்னும் ஏற்றுகொள்ளவில்லை
என்கின்ற துக்கத்திலேயே
என் இதயம் இறந்துபோய்கிறது
தினமும்..

வாழ்வின் சுவையை
உன்னில் அறிய முயன்றேன்
இன்று...
கண்ணீரின் சுவையை
அறிந்துகொண்டேன்..
காதலும் கடலும்
ஒன்று தான்.
கடலில் முழ்கி
முத்தெடுப்பது போல
தான் காதலும்.

உன்கண்கள் கண்டேன்
என் இதயம் தொலைத்தேன்...
உன்கைகள்
என்கன்னம் தழுவிய
போது அன்பை உணர்ந்தேன்..
நீ என் அருகில் இருக்கும்
போதெல்லாம் என் நெஞ்சில்
சாரலை.. இருந்தாய்
இன்று தூரமாய் சென்றுவிடவே
என் நெஞ்சம் பாரமாய் அவதேனடி..

உன் காதுமடலை
கலைவடித்த அந்த பிரமனுக்கு
எப்படி நன்றி சொல்லுவேன்..
உன் செவ்விதழின் சிவந்த
நிறத்தை பார்த்து
ரோஜா கூட தவம்
கிடக்கும்.
தன் இதழில் வண்ணம் சேர்க்க.

உன்னருகில் நின்றபோது
இடமாறதுடிக்கும்
என் இதயம்
கரை தீண்டும் அலை
போல
உன் இதயத்தை வந்து வந்து
செல்கிறதே!

என் கன்னத்தை
உன் இதழால் ஈரமாக்குவாய்
என்று நான் கனவு கண்டபோது
ஈரத்தை உணர்ந்தேன்
உன் முத்தத்தால் அல்ல
என் கண்கள் விட்ட கண்ணீரால்

உன் பக்கத்தில் நிற்க்கவே
வெகுநேரம் நின்றேன்
வெகுநேரம் நின்றும்
உன் மௌனம் மலராத மொட்டகவே
இருந்தன.. உன் இதழ் பார்த்தே
என் பூக்கள் எல்லாம் வாடிபோனதடி..

பூக்களை கூட நேசிக்காதவன்
உன்னை பார்த்தும்
நேசிக்க தொடங்கினேன்........
பூக்களின் மென்மையை அறியாதவன்
உன்மனதின் மென்மையை அறிந்தேன்..
விழிகூட கேட்கிறது கண்ணீர்
வரும் நேரங்களில்
உன் மடிவேண்டுமென்று,,,,,,,,,,,
என் விழிமூடுமுன் வந்துவிடு
உன்முகத்தை பார்த்தேன்
விடைபெறுகிறேன்..
உன்னை விட்டு அல்ல
இந்த மண்ணை விட்டு......

பிரிவின் வேதனை.........


வானில் சில நட்சத்திரங்கள்.
நீ உற்று நோக்குகிறாய்.
வானம் இன்னும் வெளிச்சமாகிறது.

எங்கோ ஒரு மூலையில்
நீ பார்ப்பதை சொல்லி
அனுப்புகின்றன.
காற்றுக் கற்றைகள்.

உன் விழியலைகள் என்
விரல்களைப் பிடித்துகூட்டி
செல்கின்றன.

நீ ரசிப்பதை நானும்
ரசிக்க.

மலையின் உச்சியில்
அமர்ந்து வானத்தைப்
பார்க்கிறேன்.

மேகங்கள் ஒன்றுகூடி
உன் முகத்தை தோற்றுவித்து
என்னை தோற்கடிக்கின்றன.

என் காதுகளை
செவிடாக்கி,
உன் நினைவும்
என் நினைவும் தனியாக
பிரிந்துச் சென்று
உரையாடிக் கொள்கின்றன.

நீ சூடி எறிந்த
ஒற்றை ரோஜா
பேருருவம் எடுத்து
கண்முன் உதிக்கிறது.

மலர்மணம் வீசும்
மல்லிகை கூந்தலும்,
விரலோடு சிக்கி
உடையும் குழலும்,
நினைவில் வருகின்றன.

தேவதையே என்
பிரிவின் வேதனை
உனக்கும் இருக்குமோ?

என் தேவதை..........


மல்லி மலரடி தொட்டு
மலர்கொள்ளும் கார்கூந்தல்வரை...
பிரம்மன் தன் கலைத்திறமையை
பிரமிப்புடன் வெளிக்கொணர்ந்தமையால்
படைக்கப்பெற்ற சிறந்த ஓவியம் நீ..

இதழ்கள் பேசத் துடிக்குமுன்
விழிகளே பேசி முடிக்கின்றமையால்
மௌனபாசையில் மட்டுமே!
தவமிக்கின்றன ஒவ்வொரு வினாடியும் ....

கணைதொடுக்கும் காமனையும் களிப்படையச்செய்யும்
விழிகள் உனக்கு!
விழிகள் வழியே மொழிகள் நடைபயில்வதை
உன்னிலிருந்து மட்டுமே காணமுடிகிறது...

பிரம்மன் உலகுக்குச் செய்த மிகப்பெரிய தவறு
உன்னை படைத்தத்து....

அதனால்தான் என்னவோ - உலகமே பாவத்தில்...

வண்டுகளுக்குள் ஒரு தீர்மானமாம்!
நீ மட்டும்- உன்
உதடுகள்மேல் அமரச்சிறிது இடமளிப்பதாக இருந்தால்!!!
எந்தப்பூவையும் தீண்டுவதில்லையென்று...

மொத்தத்தில்...
தவணைமுறையில் உயிர்குடிக்கும்,
ஓர் அழகிய ராட்சஸி!!!

என் தேவேதை நீ !