ஜன்னலோர
பஸ் பயணத்தில்..
கழுத்து செயினை
பல்லில் கடித்தபடி..
தினம் பயணிக்கிறாய்..
ஒற்றை
ஜடைப் பின்னலில்..
'இரவை' அள்ளி முடிந்திருக்கிறாய்.!
லேசாய்
முனை உடைந்த
தெற்றுப் பல்லில்
சிறு புன்னகையை..
பூசி வைத்திருக்கிறாய்..
கீழ் இதழின்..
வளைவோரத்தில்..
முற்றுப்புள்ளியை போல்
ஒரு
மச்சப் புள்ளி.
சொல்..
உன்
பெயர்..
'கவிதை' தானே..?
Thursday, June 2, 2011
Thursday, February 17, 2011
Friday, November 12, 2010
பிரியாத வரம் வேண்டும் !

பிரிவை
ஏற்கனவே
நீ
தந்துவிட்ட பின்பு
நான்
பிரியாத
வரம் கேட்டால்
கேலி செய்யும் அன்பு
தோல்வி கூட சுகம்
என்று எனக்கு
சொல்லித்தந்தது உன் காதல்
நீ தந்த
காயங்கள் எல்லாம்
கருவாகி என்னுள்
கவிதை குஞ்சுகளை
பிரசவித்துக்கொண்டிருக்கிறது..
இதுதான் தருணம் என
நீயும் விட்டு சென்றுவிட்டாய்.
இந்தா மரணம் என
இதயத்திற்கு பரிசு தந்துவிட்டாய்.
இதயத்தின் ஓரமாய் சின்னதாய் ஒரு வலி
மருத்துவம் பார்க்க தேடினேன் ஒரு வழி
இதயம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றார்கள் !
அது உன் நினைவால் என்றேன் நான்..
இதயம் செயலிழக்கக்கூடும் என்றார்கள் !
செயல் என்பது நீ என்றேன் நான்...
இதயத்தில் ஓட்டை என்றார்கள் !
அது நீ வந்து போன வழி என்று
அவர்களுக்கு எப்படித் தெரியும் ?
இதயம் இறந்துவிடும் என்றார்கள் !
அது உனை இழந்த பின்பு
ஏற்கனவே இறந்துவிட்டது
அவர்களுக்கு எப்படித் தெரியும் ?
முதல் பார்வை; முதல் ஸ்பரிசம்; முதல் முத்தம்..
இப்படி உன் நினைவாக
எதுவுமே என்னிடம் இல்லை
நீ தந்த இந்த
முதல் பிரிவைத் தவிர...
வெட்கம் காதலாகி பயத்தில் அச்சமானது உன்னிடம் ;
கவிதை காதலாகி கண்ணீர் மிச்சமானது என்னிடம்..
நானோ உன் கனவனாய்
தினமும் கனவுகளில் வாழ்ந்துவிட்டேன்
இப்பொழுதுதான் தெரிகிறது
நீயோ இன்னும் உறங்கவே ஆரம்பிக்கவில்லை என்று
இனி என் வாழ்க்கையில்
என்னால் மறக்கவே முடியாது என நினைக்கிறேன்;
நீ கடைக்கண் பார்த்த அந்த ஓரிரு நாட்களை
நீ புன்னகை புரிந்த அந்த ஓரிரு மாதங்களை
நீ பேசிப் பழகிய அந்த ஓரிரு வருடங்களை
மறக்கத்தான் நினைக்கிறேன்
நீ என்னை உதறிச் சென்ற அந்த ஒரு நொடியை....
நீ காதலித்தது என்னை அல்ல
என் கவிதைகளைத்தான் என்பது
இப்பொழுதுதான் எனக்குத் தெரியும்
உனக்கு அடையக்கிடைப்பதும் நான் அல்ல
என் கவிதைகள் மட்டுமே என்பது
எப்பொழுதோ உனக்குத் தெரியும்
இப்படி உனக்கு என்ன தேவையோ ;
அதை நீ எடுத்துக்கொள்கிறாய்..
என்னால் என்ன தரமுடியுமோ ;
அதையும் நான் தந்துவிடுகிறேன்
இருந்தும் நீ கேட்கவிருந்து ;
நான் தரமுடியாமல் போனவை எத்தனையோ ?
என்னால் தரமுடிந்து ;
நீ கேட்காமல் போனவை எத்தனையோ ?
காதலில் !
நாம் பல கேள்விகளுக்கு பதில் தருவது இல்லை...
ஏன் என்றால் !
பதில் கிடைக்கும் என்கிற கேள்விகளை மட்டுமே நாம்
கேட்டுக்கொண்டிருக்கிறோம்...
Thursday, January 7, 2010
Kiss You And Whisper

If the sun decides to no longer shine
It's OK, cause I won't whine
I have the beauty within Your face
Lighting My world with Your glowing grace
If the Bird's stop singing their songs
It's OK, cause nothing's wrong
I have the beauty of Your soft voice
Causing My heart to totally rejoice
If this old world becomes too cold
It's OK, cause I have You to hold
I'll run to You with My warm embrace
As I kiss Your pretty face
If the stars don't shine at night
It's OK, cause its all right
I have the love glow in Your eyes
My sweet Woman, You're My prize
If there is no more air to breathe
It's OK, we'll be Together to leave
I'll take My last breath holding You
Kiss You And Whisper, I Love You!!!!!
Thursday, December 24, 2009
உன் நினைவுகளின் துணையோடு......

உன்னை பிரிந்து
நாட்கள் கடந்து இருக்கலாம்
உன்னை மறந்து
ஒரு நிமிடமேனும் கடக்காது…..
இன்றுவரை உன்னை பிரிந்து
எத்தனையோ நாட்கள்
கடந்து விட்டேன்
உன் நினைவுகளின் துணையோடு.....
ஒரு பக்கம் நினைத்து பார்த்தால்
வேதனையாய் இருக்கிறது
மறு பக்கம் பார்த்தால் ஏனோ
மனம் அதையே விரும்புகிறது…
உறக்கம் முடிந்தாலும்
கனவுகள் மட்டும்
தொடர்கின்றது....
ஒரு வழியாய் கனவை
கலைத்து விடுவேன்
ஆனால் நினைவை
நான் நினைத்தாலும் ...
கலைக்க முடியாது….
உன் நினைவுகளை
சுமந்து கொண்டு
இருக்கும் இதயம்
உனக்கே சொந்தம்
வேறு பெண்ணையும் நினைக்காது....
உன் நினைவுகளின்
துணையோடு காலம் கடப்பேன்.....!!
Wednesday, December 16, 2009
உன் அணைப்பினால் அழகாகிறேன்
மெல்லிய மழைச்சாரல்
ஜன்னல் வழியே தெறிக்க
பின்னிரவின் குளிரில் உன்னை
இறுக்கி அணைத்தபடியே
படுத்திருக்கும் அந்த சுகம்
மரணத்தின் விளிம்பு வரை நீளும் வரம் வேண்டும்.
எத்தனை வேதனைகளை
சுமந்தபடி வந்திருந்தாலும்,
உன் இறுகிய அணைப்பினால்
அத்தனை வலிகளையும் அழித்துவிடுகிறாய்.
இருவரும் அணைத்தபடி
படுத்திருக்கும் சுகத்தைவிட,
நீ என்னிடம் கோபித்துக் கொண்டு
எனக்கு எதிர்புறமாய் திரும்பியபடி
படுத்திருக்கும் நேரத்தில்,
மெதுவாய் உன் பின்னால் இருந்து
அணைத்துக் கொள்ளும் அந்த சுகம்
எனக்கு மிகப் பிடித்தது.
அப்போது மெதுவாய் உன் விரல்கள்
என் விரல்களை
சிறைப்பிடித்துக் கொள்ளும்.
அந்த ஒரு நொடியில்
இதுவரை என்னிடம்
நீ கொண்ட கோபம் எங்கே போயிற்று?
என்று கண்டுபிடிக்கும் பொறுப்பை
இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தால் கூட
அவர்களால் கண்டுபிடிக்க முடியாது.
உனக்கு புத்துணர்ச்சி தேவைப்படும்
நேரங்களில் காஃபி குடிக்கிறாய்.
எனக்கு புத்துணர்ச்சி தேவைப்படும்
நேரங்களில் உன்னை
கட்டிப்பிடித்துக் கொள்கிறேன்.
உன்னை அறியாமல்
உன் தூக்கத்தின் இடையே
என் அருகே வந்து நீ என்னை
அணைத்துக் கொள்ளும்
அந்த சுகத்தை அனுபவிக்க வேண்டும்
என்பதற்காகவே இரவு முழுவதும்
துங்காமல் விழித்திருப்பேன்.
எனக்கு தேவை
உன் முத்தங்கள்தான்.
ஆனால் அதை நேரிடையாக கேட்பதைவிட,
உன் அணைப்பை மட்டும்தான் கேட்பேன்.
ஒன்று வாங்கினால்
ஒன்று இலவசம் என்பது போல்,
நீ உன் அணைப்போடு சேர்த்து
உன் முத்தங்களையும்
இலவசமாக தருகிறாய்.
நீ அணைக்கையில்
உன் கழுத்தோரம் மணக்கும்
வாசனைக்கு இணையான பெர்ஃயூம்,
இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை.
தூக்கத்தைவிட,
கனவுகளைவிட,
உன் அணைப்பையே
அதிகம் விரும்புகிறேன்
நீ மட்டும் என்னை
அணைத்து கொண்டு இருப்பாயேயானால்
ஆயுள் முழுவதும் உன் அருகில்
தூங்கிக்கொண்டு இருப்பேன்.
நேற்று இறந்து விட்டேன்

சற்றே வியந்துதான் போகிறேன்
உன் மனதின் நிறம் மாறும்
குணத்தை எண்ணி....
அளவில்லா ப்ரியங்களுடன்
அணுஅணுவாய் என்னை காதலிக்க
முடிந்த உன்னால் எப்படி இன்னொரு
இதயத்தையும் காதலிக்க முடிந்தது?
நேற்று விளையாட்டாய் உன் கைப்பேசியை
எடுத்துப் பார்க்கையில்தான் என் மனம்
தற்கொலை செய்துகொண்டது.
எனக்கு மட்டுமே சொந்தமான
உன் Sent items' ல் யாரோ ஒருவருக்கு
நீ அனுப்பிய ஐலவ்யூக்களும், உம்மாக்களும்
என்னுள் ஏற்படுத்திய வலியை
உன்னால் உணரக்கூடுமா?
என் குரல் சேமித்து வைக்கப்பட்டிருந்த
உன் ரெக்கார்டிங்கில் இப்போது
இன்னொருவர் குரல்...
உன் தொலைபேசியில் இருந்த என்
அத்தனை புகைப்படங்களும் எங்கே போயிற்று?
உன்னால் பதில் சொல்ல முடிகிறதா?
என் முன்னாலே நீ உன் புதுக்காதலுடன்
சிரித்து பேசுகையில் நொடிக்கொருமுறை
உன் காதலின் நினைவுகளால்
கற்பழிக்கப்படுகிறேன்.
இறைவா என் எதிரிக்கும் வேண்டாம்
இப்படி ஒரு வேதனை.
எனக்கு நிச்சயமாய் தெரிகிறது
உன் ஸ்பரிசங்களும், உன் முத்தங்களும்
இனி இன்னொருவருக்கு தான் சொந்தம் என்று...
மூளைக்கு புரியும் இந்த உண்மையை
மனம் அடம்பிடித்து ஒப்புக்கொள்ள மறுக்கிறது.
உன் வாசம் படிந்த கைக்குட்டை..
உன்னுடன் கண்டு களித்த சினிமா டிக்கெட்..
ஓயாமல் சிரிக்கும் உன் புகைப்படம்..
காதலுடன் நீ வரைந்த கிரீட்டிங் கார்ட்
என உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டே
இருக்க வேண்டும் என நான் பத்திரப்படுத்திய
உன் நினைவுகள் அனைத்தும் வெறும்
நினைவுச் சின்னங்களாக மட்டுமே இருக்கும் என
சத்தியமாய் நினைக்கவில்லை...
என் வசந்த காலத்தின்
ஒரு பக்கத்தை முற்றிலும்
இலையுதிர் காலமாய் செய்தாய்.
மனம் வலிக்கும் நேரங்களில்
உன் நினைவுகள் மட்டுமே சுகமாய் இருக்கும்.
ஆனால் இன்றோ என் மனவலிக்கு
முழுமுதற் காரணமும் நீயாய்...
அழுவது அவமானச் சின்னம்
என்பது என் கொள்கை.
ஆனால் இன்றோ என் கண்ணீர்
சுரப்பிகள் கூட வற்றிவிட்டன.
தற்கொலை செய்துகொள்வது
கோழைத்தனத்தின் உச்சம் என நினைத்திருந்தேன்.
கண் முன்னே இப்படி ஒரு வலியை
உணர்கையில்தான் தோன்றுகிறது
தற்கொலை பாலைவனத்தில் நீரைப்போல்...
உன் மனதின் கொடூரத்தை தாங்க இயலாமல்
ஒரு நொடியில் மணிக்கட்டை
கூரிய பிளேடால் அறுத்துக் கொண்டேன்.
நீ கொடுத்த வலியைவிட அது ஒன்றும்
வேதனை நிறைந்ததாய் இருக்கவில்லை.
என் காதல் நரம்புகளை அறுத்துவிட்டு,
நீ வீணை வாசிக்கிறாய்.
என் சந்தோஷ சிறகுகளுக்கு தீ வைத்துவிட்டு,
நீ குளிர்காய்கிறாய்.
யாரை நோக்கியோ உன் பார்வைகள்.
குருடாய் போனது என் உலகம்.
யார் பெயரையோ உச்சரிக்க தயாராய் உன் இதழ்கள்,
ஊமையாகிப் போனது என் தேசம்.
என் SMS சேமித்து வைத்திருப்பாய்.
எதற்கு என்று கேட்டால்,
உன் நினைவுகள் வரும் போது
எடுத்து படித்து கொள்ள என்பாய்..
இப்போது உன் Outbox' ல் கூட என் SMS இல்லை.
ஏன் இப்போதெல்லாம் என் நியாபகம்
உனக்கு வருவதில்லையா?
நான் அனுப்பிய
சில காதல் மெசேஜ்களையும்,
படங்களையும் சேமித்து வைத்திருந்தாய்.
சில நொடிகள் சந்தோஷப்பட்டது என் மனம்.
பிறகுதான் தெரிந்து கொண்டேன்
யாரோ ஒருவருக்கு Forward செய்ய அதை
எல்லாம் நீ பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாய் என்று..
"மனம் மரணமடைந்தது" என்ற ஷெல்லியின்
வார்த்தையை அனுபவித்து உணர்ந்தேன் அன்று..
வாழ்ந்துகாட்டு! வாழ்ந்துகாட்டு
என்று என் உறவுகள் எனக்கு
ஆறுதல் சொல்கின்றனர்.
இனி நான் எத்தனை கோடிகள் சம்பாதித்தாலும்
நீ எனக்கு கொடுத்த அந்த காதலை
என்னால் சம்பாதிக்க முடியுமா?
என்னதான் நான் பென்ஸ் காரிலே வந்து
உன் முன்னால் இறங்கினாலும்
உன் துணையுடன் உன்னை பார்க்க நேர்கையில்
என்னால் சிரிக்க முடியுமா?
வேறு யாரை நான் கட்டி அணைத்தாலும்
அந்த அணைப்பில் உன் வெப்பத்தை
என்னால் மறந்துவிட முடியுமா?
எத்தனையோ அழகான கவிதைகளை
என்னை எழுத தூண்டியது நீதான்.
இன்று துயரங்களையும் சுமக்கும் பக்குவத்தை
எனக்கு தந்து இப்படியும் கவிதைகள் எழுதலாம்
என புதிய அனுபவத்தையும் எனக்கு கற்று தந்தாய்.
உனக்கு நன்றி.
என் பெயர் சொல்லி அழைக்க மறந்து,
யாரோ ஒருவர் பெயரை சொல்லி நீ அழைத்தாய்,
அந்த ஒரு நொடியில் லேசாய் உதடு கடித்து
ஒற்றை வார்த்தையில் "சாரி" என்று
சொல்லிவிட்டு போய் விட்டாய்.
நேற்றே நான் இறந்து விட்டேன்.
Friday, December 11, 2009
தொலைத்த முத்தங்கள்.......

அவசரம் எதற்கு..
பொறுமையாக கூட்டிக்கொண்டேவா ,
வெட்கத்தின் வளைவுகளில்
பூத்திருக்கும் முத்தங்களையும்..!
என் மௌனங்களனைத்தும்
நொறுங்கி எழுகிறது..
உன் முத்தங்களின் புன்னகையில்..!
பிழையாயிருந்த எனதுயிர்
தப்பி பிளைக்கிறது
நீதரும் முத்தங்கள்முன்..!
என் காதல்
அர்த்த செறிவுடையதாகிறது
உன் முத்தங்களுக்கு
கோடி நன்றிகள்..!
என் வாழ்வியலை
சாதலில் ,
உன் முத்தம்தான்
நிரப்புகிறது..!
தொலைத்த முத்தங்கள்..
உனக்கான காத்திருப்புகளில் ,
தேடி கொடு..!
எழுதிய முத்தங்கள் நூறு
இருத்தல் அமைந்தாலும்
எழுதாத முத்தங்களில்..
நீ..இன்றுமென்ற
ஒரே வருத்தம்தான்
என் உறக்கம் தொலைக்கின்றது..!
துவங்கும் பொழுதினிலேயே
முடிந்தும் விடுகிறது
என் கவிதைகளனைத்தும்
உன் முத்தங்களின்முன்..!
நான் தவறவிட்ட முத்தங்களை
இன்னும் உன் ,
கன்னக்குழியில் தானே..
ஒளித்துவைத்திருக்கிறாய்..!
எங்கே விழுந்திருக்கும் - என் இதயம்..!!!!!!

இடை விடாது நீ பேசும்
வார்த்தையின் வரிசையிலா..?
இல்லை வார்த்தைகள்
ஓய்வெடுக்கும் இடைவெளியில்
வந்து போகும் அந்த மெல்லிய புன்னகையிலா..?
இதயம் களவாடும் வித்தைக் கற்ற
உன் கண்களிலா..??
இல்லை என்னை கவி எழுத
வைக்கும் உன் காதலிலா..??
இதுவரையில் தென்றல் மட்டுமே..
தீண்டி சுகம் பெற்ற.....
உன் கட்டழகு மேனியிலா..??
இல்லை புன்னகையோடு வார்த்தை
கலந்து பேசும் உன் புதுமையான பேச்சிலா..??
இல்லை எங்கோ வரும் என்னை இருந்த
இடத்திலிருந்தே தாக்கும் உன் கண்களின் வீச்சிலா..??
பருவம் சுமந்து வரும் உன் பேரழகிலா..??
பாவை உன் பாதம் நடந்த திருவீதியிலா..??
எங்கடி விழுந்திருக்கும் என் இதயம்
தெரியாமல் விடியல் காண மறுக்குது என் உதயம்..!!!
கண்டெடுத்தால் தந்து விடு...!!!
இல்லையேல் அதற்கும் சேர்த்து
நீயே காதல் பாடம் கற்று கொடு..!!!!
Friday, November 6, 2009
நீ இல்லாத இரவுகள்........

வெறுமையாகவே விடிகிறது
நீ இல்லாத இரவுகள்........
கனவில் பேசிய வார்த்தைகள் கூட
காலையில் மறந்து போகிறது
மனப்பாட பகுதிகளைப்போல ...
நீ கொடுத்த முத்தங்கள்........
அலைபேசியின் எந்த பகுதியில்
ஒளிந்து கிடக்கிறதோ இப்போது .......
மவுனத்தின் நிசப்தங்களில்
எதிரொளித்துக்கொண்டே இருக்கிறது
நீ பேசிய வார்த்தைகள் ....
எங்கிருந்தாலும் என்னை
நெட்டித்தள்ளி
இழுத்துக்கொண்டு போகிறது
உன் நினைவுகள் ....
உன்னைப்பற்றி எழுதும்போதெல்லாம்
இளமையை கொட்டுகிறது
என் பேனா.......
வீதியில் போகும் பலூன்காரனை
வேடிக்கை பார்க்கும் குழந்தையைப்போல்
வேடிக்கை பார்க்கிறேன்
என்னைக்கடந்து போகும்
காதல் ஜோடிகளை ........
கடை வாசலில் தொங்கும்
உடையை உனக்கு போட்டு
அழகு பார்க்கிறேன்
கற்பனையில்....
எங்கோ கேட்கும் ரயிலின் சத்தம்
நினைவுபடுத்துகிறது
நீ வழியனுப்பி வைத்த நிமிடங்களை ...
வானம் பார்த்து படுத்திருக்கும்
மொட்டைமாடி இரவுகளில்
நிலவு நினைவுபடுத்துகிறது
ஒப்பனையற்ற உன் முகத்தை ....
ஒட்டைக்குடிசையில் ஒழுகும்
மழைத்துளிகளைப்போல்
உள்ளுக்குள் சில்லிடுகிறது
சில நிமிடங்கள் .........
உன்னால் அனுபவிக்கும்
தனிமையின் வலியை
உனக்கும் தர மனமில்லை
அதனால் அனுப்புகிறேன்
உனக்கு துணையாய்
என் கவிதைகளை.........
Wednesday, October 28, 2009
முத்தம் தொலைத்த இரவு...

இரவின் இருளில்...
இலக்கின்றி நடந்துக் கொண்டிருந்தேன்.
யாருமற்ற சாலையின்..
வளைந்த பாதையில்..
அவள் நின்று கொண்டிருந்தாள்.
மெல்லிய போர்வையொன்றை..
போர்த்தியபடி..
அவளை இதற்க்கு முன்..
எங்கும் பார்த்ததில்லை.
கடந்து போகையில்..
மெல்லிய புன்னகையோடு..
உடன் நடக்கலாமா என்றாள்.
பதிலேதும் எதிர்பாராமல்...
என்னோடு நடக்க தொடங்கினாள்.
என் கவிதைகளை..
அவளுக்கு தெரியுமென்று...
என் கண்களை பார்த்தாள்.
எங்கு படித்தாய் என்ற
என் கேள்விக்கு
புன்னகையை பதிலளித்தாள்.
மெல்லிய சோகம் படர்ந்த...
என்னுடைய கவிதைகளை
பிடிக்குமென்றாள்.
பிடிக்காத கவிதையென்றும்...
சில தலைப்பை..
பட்டியலிட்டாள்.
மிக தெளிவாய்..
என் கவிதை வரிகளை..
பிழையின்றி வாசித்தாள்.
கேட்டபடியே நடந்திருந்தேன்.
அந்த பனியிரவின் பாதையில்...
வெகுதூரம் கடந்திருந்தோம்.
சில நொடி மௌனம் உடைத்து..
கவிதை ஒன்று
சொல்ல சொன்னாள்...
"எதைப் பற்றி சொல்வது..?"
"இந்த பனி இரவும்..
உடன் வரும் நானும்...
போதவில்லையா உன் கவிதைக்கு.."
கோபமா வருத்தமா தெரியவில்லை...
ஏதோ சொல்ல தொடங்கி...
கவிதையாய் சொல்லி முடித்தேன்.
இரவு...
தொலைய துவங்கியிருந்தது..
"இந்த கவிதைக்கு தலைப்பாய்..
என் பெயர் வைப்பாயா..?"...
ஏனென்றே புரியாமல்..
நானும் தலையசைத்தேன்..
அழுத்தமாய் முத்தமிட்டு..
காதோரம் பெயர் சொன்னாள்..
விடியலின் நிழல் வரும் முன்...
வேகமாய் மறைந்தே போனாள்.
கனவு போலிருந்தாலும்...
கவிதை நினைவிருந்தது.
எழுதி முடித்த போது..
அவள் பெயர்..
மறந்து போயிருந்தது...
முதல் காதல் கடிதம்.....!!!!!
விழியால் இதயம் கவர்ந்தவளுக்கு
எளிதாய் இதயம் இழந்தவன் எழுதுகிறேன்.....
இது வரையில் எழுதி பழக்கமில்லாத
கடிதம் என்பதால் ஒரு வித
பதட்டத்தோடு தொடர்கிறேன்......
பாசம் கொட்டி எழுதுவதால்
பல இடங்களில் வார்த்தைகள் அழிந்திருக்கும்...
அழிந்த வார்த்தையின் பொருள்
நான் சொல்லாமலே உனக்கு புரிந்திருக்கும்...
திசை எங்கிலும் தெரியும் உன் முகத்தை
என்னால் மறக்க முடியவில்லை....
துருவி துருவி... நீ கேட்ட போதும் கூட.....
காதலை என் மனதுக்கு சொல்ல தெரியவில்லை.....
மனதார உன்னை நினைக்கிறேன்...
ஆனாலும் சொல்லாமல்
மனதுக்குள்ளே மறைக்கிறேன்....
கருவை சுமக்கும் தாய் கூட....
பத்து மாதத்தில் இறக்கி வைப்பாள்
அந்த சுகமான சுமையை...!!!!!
காதலை சுமக்கும் இதயம்
காதலியிடம் சொல்ல மறுப்பதால்
நித்தமும் குளமாக்குது இமையை..!!!!
வாச மலர் பறித்து வந்து
நேசம் சொல்லவா..????
இல்லை வான் நிலவை அழைத்து
வந்து தூது சொல்லவா?????
தெரியாமல் புரியாமல்
அலை பாயுது மனம்......
அதனால் தான் காதல் கடிதம் ஒன்று
எழுதுகிறேன் இன்றைய தினம்.....
எனக்காக ஆரமித்து... உனக்காக எழுதி.....
நமக்காக முடித்து......
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.....
நீ வரும் பாதையில் காதலை சொல்ல..!!!!!
Friday, October 9, 2009
உன்னிடம் சொல்லிவிட்டேன்

உன்னிடம் சொல்லிவிட்டேன்
என்ற எண்ணத்தில்
நான் இருப்பதை விட..
நீ என்னை இன்னும் ஏற்றுகொள்ளவில்லை
என்கின்ற துக்கத்திலேயே
என் இதயம் இறந்துபோகிறது
தினமும்..
வாழ்வின் சுவையை
உன்னில் அறிய முயன்றேன்
இன்று...
கண்ணீரின் சுவையை
அறிந்துகொண்டேன்..
காதலும் கடலும்
ஒன்று தான்.
கடலில் முழ்கி
முத்தெடுப்பது போல
தான் காதலும்.
உன்கண்கள் கண்டேன்
என் இதயம் தொலைத்தேன்...
உன்கைகள்
என்கன்னம் தழுவிய
போது அன்பை உணர்ந்தேன்..
நீ என் அருகில் இருக்கும்
போதெல்லாம் என் நெஞ்சில்
சாரலை.. இருந்தாய்
இன்று தூரமாய் சென்றுவிடவே
என் நெஞ்சம் பாரமாய் அவதேனடி..
உன் காதுமடலை
கலைவடித்த அந்த பிரமனுக்கு
எப்படி நன்றி சொல்லுவேன்..
உன் செவ்விதழின் சிவந்த
நிறத்தை பார்த்து
ரோஜா கூட தவம்
கிடக்கும்.
தன் இதழில் வண்ணம் சேர்க்க.
உன்னருகில் நின்றபோது
இடமாறதுடிக்கும்
என் இதயம்
கரை தீண்டும் அலை
போல
உன் இதயத்தை வந்து வந்து
செல்கிறதே!
என் கன்னத்தை
உன் இதழால் ஈரமாக்குவாய்
என்று நான் கனவு கண்டபோது
ஈரத்தை உணர்ந்தேன்
உன் முத்தத்தால் அல்ல
என் கண்கள் விட்ட கண்ணீரால்
உன் பக்கத்தில் நிற்க்கவே
வெகுநேரம் நின்றேன்
வெகுநேரம் நின்றும்
உன் மௌனம் மலராத மொட்டகவே
இருந்தன.. உன் இதழ் பார்த்தே
என் பூக்கள் எல்லாம் வாடிபோனதடி..
பூக்களை கூட நேசிக்காதவன்
உன்னை பார்த்தும்
நேசிக்க தொடங்கினேன்........
பூக்களின் மென்மையை அறியாதவன்
உன்மனதின் மென்மையை அறிந்தேன்..
விழிகூட கேட்கிறது கண்ணீர்
வரும் நேரங்களில்
உன் மடிவேண்டுமென்று,,,,,,,,,,,
என் விழிமூடுமுன் வந்துவிடு
உன்முகத்தை பார்த்தேன்
விடைபெறுகிறேன்..
உன்னை விட்டு அல்ல
இந்த மண்ணை விட்டு......
Thursday, October 8, 2009
மரித்தகாதல் மரித்ததாயிருகட்டும்....

விழிகள் வழியாக இதயத்தில்
போர் தொடுத்து
என் காதல் சாம்ராஜ்யத்தின்
சிம்மாசனத்தை வீழ்த்தியவளுக்கு...
இந்த உலகத்தில்
என்னை இன்னமும் வாழவைத்துக் கொண்டிருக்கும் உன் நினைவுகள்தான்
என்னை தினம் தினம் கொல்லவும் செய்கின்றன...
என் மூச்சு ஒரு நாள்
அதன் முகவரி தேடி வரும்
அப்போதாவது திறந்து வை
உன் இதயத்தின் கதவுகளை..
உன்னோடு பார்க்கவேண்டிய உலக
அதிசயங்கள் எல்லாமே எங்கே என்
அதிசயம் என்று கேக்கிறது அதற்கு
எப்படித் தெரியும் உன்னை நான்
சுற்றிச் சுற்றி ரசிப்பது...............
உன் நட்புக்காக இதயத்தில்
இடம் கொடுக்க பலர் உன்டு.....
உன் நட்புக்காக இதயம்...
கொடுக்க நர்ன் மட்டும் உன்டு.......
சாகடிக்கபடலாம் .... ஆனால் நான் தோற்க்கடிக்க படமாட்டேன்
காதலிக்கும்போது புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாது!!!!
என் கல்லறை வரும் வழியெங்கும்
முட்களை தூவுங்கள்....
ஒருவேளை அவளின் கண்ணீர்பட்டு
என் காதல் உயிர்த்தெழலாம்
எனக்கு விருப்பமில்லை
மீண்டும் இறந்துவிட...
மரித்தகாதல் மரித்ததாயிருகட்டும்....
Monday, September 21, 2009
ஒரு காதல் கவிதை

"காதலின் கால நகர்தல்"
ஒரு சின்ன புள்ளியாய்
உன் -
கருவிழியிலிருந்து
நினைவுருகிறது நம் காதல்!
உனக்குள் நானாகக்
கரைந்த - அந்த நாட்கள்
இன்னும் வலிப்பதாகவே கடக்கின்றன;
தெருக்களின் நீளத்திலெல்லாம் - என்
ஆயுளை - உன் - வருகைக்காய்
பதித்து வைத்திருந்த காலமது;
உடல் உரசா தூரத்தில் - இதயங்கள்
இரண்டும் ஒன்றென சங்கமித்திருந்த
அந்த வேளையில் தான் -
நேரம் காலம் நட்சத்திரம் - பார்த்தடிக்கப்
பட்ட உன்-
திருமண அழைப்பிதழில் -
முதல் முதலாய் நம் பிரிவும்
நிரந்தரமாய் அறிவிக்கப் பட்டன;
எப்படியோ சேர்ந்தே விடுவோமென்றிருந்த
மிச்சம் மீதி நம்பிக்கையும் -
யாரோ உனக்குப் போட்ட
மூன்று முடுச்சுகளில் அவிழ்ந்து போனது;
உண்மையில் -
உனக்கு எத்தனை வலித்ததோ -
தெரியவில்லை, எனக்கு இன்றுவரை
வலியாகவே 'மறக்க மறுக்கிறது - நம்
காதல்!
இதோ அம்மாவாகியும் விட்டாயாம்;
நீ -
அம்மாவாகிவிட்ட வெற்றியில் தோற்ற - நம்
இதயத் தெருக்களில் - இனி எந்த ஜென்மம் வந்து
சிரிப்புக் கோலமிடுமோ; இட்டுபோகட்டும்,
இப்பொழுதும்;
உன் குழந்தையின் சப்தத்திற்கு இடையேயும்
உன் கணவனின் அரவணைப்பிற்கு பிறகுமாவது -
ஏதோ ஒரு சின்ன சிலிர்ப்பை -
எனக்காக உன் இதையம் உணராமலா இருக்கும்???
உனக்கெப்படியோ;
நாட்கள் கடக்கும் விளிம்புகளில்..
உன் சிரிப்பும் நினைவுகளுமாகவே
என் வாழ்நாட்கள் உதிர்கின்றன;
உனக்காக காத்திருந்த காத்திருப்புகளிலும்
அழுத கண்ணீரிலும் - காதலை கற்றளவு
உன்னை நானும் -
என்னை நீயும் -
கற்றுக் கொள்ளவில்லை என்பதே நிஜம்!
என் நெஞ்சில் பச்சை குத்திய - உன்
பெயரிலிருந்து -
விழித்தே கழித்த என் இரவுகள் வரை
ஒன்றாக உனக்குத் தெரிந்திருக்குமா???
இரவின் நெடுநேரம் வரை
உன் வீட்டு வாசலில்-
நான் நின்றிருந்ததும்..,
நான் நிற்ப்பேனென நீ - உன் படுக்கையில்
அழுதுத் தீர்த்தும்..,
மறுநாள் காலை -
விடியலில் எழுந்து நீ
வாசல் தெளித்தும்..,
உன் வாசலின் ஈரமாய் - என்
இதயம் கனத்ததுமாகவே........
நகர்கிறதென் காலம்!!
பிப்ரவரி 14

இன்று..
ஊரெல்லாம் பௌர்ணமி..
எனக்கு மட்டும் அமாவாசை..!
இன்று மட்டும்
ஏனோ..
என் வார்த்தைகள்
வாக்கியமாவதை மறுக்கின்றன..
கருத்துக்கள்..
கவிதையாவதை வெறுக்கின்றன...!
பெண்ணே..
நெருப்பென்பதை அறிந்தும்
விட்டில் பூச்சிகள்
விளக்கைச் சுற்றுவது
வாழ்க்கையை வெறுப்பதால் அல்ல...
என்றாவது ஓர் நாள்..
அந்த நெருப்பும்
நீர் வார்க்கும்
என்ற நப்பாசையால்தான்..!!
இற்றுவிட்ட இதயத்தில்
இன்னும்
கொஞ்சம் வலுவிருக்கிறது..
காரணம்..
உன் நினைவு
இன்னும் அதில் இருக்கிறது..
மறந்துவிட முயற்சித்தேன்..
இறந்துவிடுவேன் என்பதால்
மறப்பதை மறந்துவிட்டேன்..!!!
காமம் கடந்து
காதல் சுமந்தேன்..
ஈமச் சடங்கின் விறகானேன்..
காதல் கடந்து
காமம் சுமந்தேன்..
வீசும் காற்றில் சறுகானேன்..!
பிறந்தது நிஜம்..
இறப்பதும் நிஜம்..
வாழ்க்கை மட்டும் மாயம் பெண்ணே..
உன்னை
நினைத்தது நிஜம்..
அனைத்தது நிஜம்..
காதல் மட்டும் காயம் கண்ணே..
ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம்

ஆம்!
அரைமணிநேர -
மின்சார அணைப்பில் தான்-
சுடர் விட்டு எரிந்தது
நம் காதல்;
"இருட்டில் என்ன
செய்கிறாய் - போ.. போயி
ஒரு மெழுகுவர்த்தி
வாங்கி வா" என்றாள் அம்மா.
மெழுகுவர்த்தி
வாங்க வந்த கடையில்
நீ -
மெழுகுவர்த்தி கொடுக்க
மனசெல்லாம் மின்சாரமும்
பாய்ந்தது;
சிரித்த உன் முகத்தையும்
நானுன்னை -
ஏனோ அப்படி பார்த்ததையும்
நீயும் ரசித்து விட -
தெருவெல்லாம் அசைபோட்ட
உன் நினைவில் -
மெல்ல வந்தது
காதல் ஆசை!
மறுநாள் விளக்கணைந்த போது
அம்மா சொல்லவில்லை -
நானாகவே கடைக்கு வந்தேன்,
நீ சிரித்தாய்..
"ஒரு மெழுகுவர்த்தி கொடு
என்றேன்;
கொடுத்தாய்..,
எனக்கு போக
மனம் வரவில்லைதான்-
"ஏன் வேறேதாவது வேண்டுமா
என்றாய்.,
"ஆம்., உன் மனது
வேண்டும்;
(மனதில் நினைத்துக் கொண்டேன்)
"என்ன?
உன் மனது
வேண்டும்;ஒருமுறை என்னை காதலிப்பாயா?
"என்ன வேணும்
ஏனப்படி பார்க்கிறாய்
என்றாய்.,
"இவ்வளவு அழகாய்
இருக்கிறாயே,
பார்க்காமல் என்ன செய்ய..
"அப்பா வரார் சொல்லு
என்ன வேணும்.,
உன் இதயம் வேணும்
ஒரேஒரு முறை
கொடேன்;
"என்ன தம்பிக்கு
என்ன வேணுமாம்;(அப்பா கேட்டார்)
"மெழுகுவர்த்திப்பா;
மெழுகுவர்த்தி வேணுமாம்..!!
"ஆமா.. அண்னாச்சி
மெழுகுவர்த்தி தான்
வேணும்.,
உன் மகளின் மனசென்று சொல்ல
தைரியம் -
வரவில்லை; எனக்கு.
வெறும் காதல் வந்தவனாய்
அவளை திரும்பி திரும்பி
பார்த்துக் கொண்டே வந்தேன்.,
'அப்பா வரார் சொல்லு
என்ன வேணும்' என்றாளே
அப்பா வரார் சொல்லு என்றாளே..
மனசு இரவெல்லாம் -
விளக்கனையுமா..
மீண்டும் மின்சாரம் போகுமா.. என
யாருக்கும் தெரியாமல்
பற்றிக்கொண்டு எரிந்தது;
மறுநாள் காலை எழுந்ததும்
"அம்மா கடைக்கு போகனுமா?
"ஏண்டா கேட்குற
அதலாம் வேணாம் -
நீ போ;போயி..படி
"போடி மோசக்காரி -
உனக்கென்ன தெரியும் என் காதல் பற்றி..
அம்மாவை திட்டுவிட்டு
உன் வீட்டு தெருவெல்லாம்
வந்து என் காதல் பூ
தூவினேன்;
உன் அப்பா என்னை
முறைத்த பார்வையை கூட
என் காதல் பக்கத்தில் -
வெற்றிக்கான குறிப்புகளென
எழுதிக் கொண்டேன்;
போகும் போதும்
வரும்போதும் -
நீ என்னை பார்க்கிறாய் என்று தெரிந்த
உன் ஒரு -பார்வைக்காய்
என் நாட்களை எல்லாம் உன்
கடை வாசலில் குவித்து
காதலி காதலி என்று கெஞ்சினேன்;
உனக்குத்தான் அதெல்லாம் புரியாமல்
சில்லரைகளோடு என் இதயத்தையும்
வாங்கி - உன்
கல்லாபெட்டியில் -
போட்டுக்கொண்டாய்;
'மோசக்காரி..
மோசக்காரி..,
திட்டிக் கொண்டே வீட்டிற்கு
வந்தேன்;
மின்சாரம் நிற்க,
விளக்கு அணைய..,
உள்ளே -
காதல் பூக்கள் பூக்கத் துவங்கின;
அம்மா நான் மெழுகுவர்த்தி வாங்கியாறேன்..
ஓடி வந்த ஓட்டத்தில்
மூச்சிரைக்க -
உன் கடை முன் வந்து நின்று
இருட்டிற்குள் எரியும் உன்
முக வெளிச்சத்தில்
அசந்து நிற்க-
"என்ன வேண்டும்?
"ஒரு மெழுகுவர்த்தி!
கொடுத்து விட்டு நீ-
அப்-புரம் திரும்பிக் கொண்டாய்;
என்னால் அங்கிருந்து நகர
முடியவில்லை,
அதற்குள் நீ-
"என்னவேண்டும்?
"மெழுகு வர்த்தி!
நீ-
மீண்டும் கொடுத்துவிட்டு என்னை பார்த்தாய்..
நான் அங்கிருந்து நகரவே இல்லை..
மீண்டும் நீ-
"என்ன வேண்டும் என்றாய் -
ஒன்றுமே தெரியாததை போல;
"இன்னொரு மெழுகுவர்த்திக் கொடு!
"அதான் இத்தனை வாங்கி
விட்டாயே இன்னுமெதற்கு
மெழுகுவர்த்தி???
"அப்போ உன் -
காதல் கொடு!!
"என்ன????
"உன் காதல் வேணும்-
என்னை காதலியேன்' என்றேன்.
"அப்பா..
அப்பா..
நீ கத்த, அப்பா ஓடிவர..
என்னவென்று விவரமறிந்து
என்னை-
தரதரவென்று என் வீடுவரை
இழுத்துவந்து அடித்து -
வீட்டின் வாசலில்
வீசிவிட்டு -
தெருவெல்லாம் என்னை
திட்டித் தீர்க்க குத்தகை
எடுத்தவரை போல
கத்திக் கொண்டே போக;
அவுமானத்தால் அம்மா கதறியழுது
என்னை வெளியே போடாவென
விரட்டியதில் -
நான் -
வெளியே வந்து நின்று
உன் கடை இருக்கும் தெருவை
பார்க்கிறேன்....,
நீ அங்கே எங்கோ
தொலைதூரம் நின்று
வருத்தத்துடன் என்னை பார்க்கிறாய்;
என் கண்கள் சற்று
கலங்கியது தான்,
கலகங்கட்டும்;
அதோ..
என் கண்ணீர் வழியே -
தரை தொட்ட என் காதல்
வருத்தங்களாய் -
உனக்குள்ளும் பூக்கிறது பார்!!
Saturday, September 19, 2009
கொஞ்சம் உயிரும் ..... காதலென சொல்லப்படுவதும்

உயிரின் கடைசி துகள்கள்
என்னை நீங்கத் தீர்மானித்த பொழுதில்
காற்றின் கரங்களை பற்றிக்கொண்டு
காலத்தின் கைபிடிக்குள் சிக்காது மீட்டு
மலைமுகட்டில் ஒரு கழுகுக்
கூட்டை என் இருபிடமாக்கினாய்
புள்ளியாய் மட்டுமே நீ தோன்றக் கூடிய தொலைவில்
புறப்படத் துவங்கிற்று என் பிரியத்தின் பிரவாகம்
உன் சுவாசத்தின் நெடி அறிய
புழுவாய் நெளிந்து நெருங்கவே
பறந்து விலகி உனக்கான தாகம் கூட்டினாய்
உன் நெருக்கத்தின் வெம்மை கிடைக்காது போயினும்
உன்னைப் பற்றிய அனுமானங்களோடு
பயணிக்கத் துவங்கினேன்
காதலின் ஆபத்தான பள்ளங்களில்
அறிவிப்பற்ற மழையாய் நீ என்னை
நனைக்கத் தொடங்கிய பொழுதில்
உனக்கான தாகம் வற்றத் துவங்கி
உன் இருத்தலை பெருந்துயராக்கிப் போனது
உன்னைகாட்டிலும் போலியானது
என் காதலை கொழுத்து வளரவிட்ட
உன்னைபற்றியதான என் அனுமானங்கள்
என் அனுமானங்களுக்கு
உயிர் இருந்திருக்கலாம்
நான் மிஞ்சி இருக்ககூடும் ..
நட்பும் காதலும்......

என்னிடம் இருந்த
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக
ஒரு இதயத்தையே
பரிசளித்தது நட்பு!
கஷ்டங்களில்
யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கைகொடுத்தது நட்பு!
துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!
கட்டுப்பாடுகளை
தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்த்த முயற்சித்தது நட்பு!
என் இலட்சியங்களை
கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!
காயம் தரும்
காதல் வேண்டாம்!
நன்மை தரும்
நட்பைக்கொடு இறைவா!
Wednesday, September 2, 2009
உன்னிடம் சொல்லிவிட்டேன்...........

உன்னிடம் சொல்லிவிட்டேன்
என்ற எண்ணத்தில்
நான் இருப்பதை விட..
நீ என்னை இன்னும் ஏற்றுகொள்ளவில்லை
என்கின்ற துக்கத்திலேயே
என் இதயம் இறந்துபோய்கிறது
தினமும்..
வாழ்வின் சுவையை
உன்னில் அறிய முயன்றேன்
இன்று...
கண்ணீரின் சுவையை
அறிந்துகொண்டேன்..
காதலும் கடலும்
ஒன்று தான்.
கடலில் முழ்கி
முத்தெடுப்பது போல
தான் காதலும்.
உன்கண்கள் கண்டேன்
என் இதயம் தொலைத்தேன்...
உன்கைகள்
என்கன்னம் தழுவிய
போது அன்பை உணர்ந்தேன்..
நீ என் அருகில் இருக்கும்
போதெல்லாம் என் நெஞ்சில்
சாரலை.. இருந்தாய்
இன்று தூரமாய் சென்றுவிடவே
என் நெஞ்சம் பாரமாய் அவதேனடி..
உன் காதுமடலை
கலைவடித்த அந்த பிரமனுக்கு
எப்படி நன்றி சொல்லுவேன்..
உன் செவ்விதழின் சிவந்த
நிறத்தை பார்த்து
ரோஜா கூட தவம்
கிடக்கும்.
தன் இதழில் வண்ணம் சேர்க்க.
உன்னருகில் நின்றபோது
இடமாறதுடிக்கும்
என் இதயம்
கரை தீண்டும் அலை
போல
உன் இதயத்தை வந்து வந்து
செல்கிறதே!
என் கன்னத்தை
உன் இதழால் ஈரமாக்குவாய்
என்று நான் கனவு கண்டபோது
ஈரத்தை உணர்ந்தேன்
உன் முத்தத்தால் அல்ல
என் கண்கள் விட்ட கண்ணீரால்
உன் பக்கத்தில் நிற்க்கவே
வெகுநேரம் நின்றேன்
வெகுநேரம் நின்றும்
உன் மௌனம் மலராத மொட்டகவே
இருந்தன.. உன் இதழ் பார்த்தே
என் பூக்கள் எல்லாம் வாடிபோனதடி..
பூக்களை கூட நேசிக்காதவன்
உன்னை பார்த்தும்
நேசிக்க தொடங்கினேன்........
பூக்களின் மென்மையை அறியாதவன்
உன்மனதின் மென்மையை அறிந்தேன்..
விழிகூட கேட்கிறது கண்ணீர்
வரும் நேரங்களில்
உன் மடிவேண்டுமென்று,,,,,,,,,,,
என் விழிமூடுமுன் வந்துவிடு
உன்முகத்தை பார்த்தேன்
விடைபெறுகிறேன்..
உன்னை விட்டு அல்ல
இந்த மண்ணை விட்டு......
Subscribe to:
Posts (Atom)

