Wednesday, November 5, 2008

காதலே ...என் காதலே...



தீர்க்கமாய் மறுக்கிறாய் நீ
தாபமாய் தவிக்கறது மனது...

நீ சொல்லாமலே இருந்துவிடு
நீ என்னைக்காதலிக்கிறாய் என்ற
நினைப்பிலேயே இருந்துவிடுகிறேன்
நீ சொல்லாமலே இரு....

ஆம் அல்லது இல்லை
என்பதை விட-உன்
மெளனம் அழகாய் சொல்கிறது
உன் காதலை.....

வானம் நீர் தெளிக்க
காகங்கள் பூபாளமிசைக்க
நீ கோலமிட்டுக்கொண்டிருந்தாய்-
என் கவிதை காட்சியாக்கப்பட்டது....

நீ சொல்லாவிட்டாலும்
ஊர் சொல்லும் நம் காதலை....

என் கனவுக்குள் நீ
உன் கண்களுக்குள் நான்
நம் நடுவே காதல்
யாருக்கும் புலப்படாமல்-
பூவுக்குள் நுழையும் காற்றுபோல்.....

காற்று இசையமைக்க
பறவைகள் பாட்டிசைக்க
மென்தூரலில் நாம் மரமொதுங்க...
வானவில் பார்த்திருந்த அம் மாலையில்
நீ காதலைச்சொன்னாய்
உலகம் நிசப்தமானது.......

No comments: