Thursday, October 8, 2009

மரித்தகாதல் மரித்ததாயிருகட்டும்....


விழிகள் வழியாக இதயத்தில்
போர் தொடுத்து
என் காதல் சாம்ராஜ்யத்தின்
சிம்மாசனத்தை வீழ்த்தியவளுக்கு...


இந்த உலகத்தில்
என்னை இன்னமும் வாழவைத்துக் கொண்டிருக்கும் உன் நினைவுகள்தான்
என்னை தினம் தினம் கொல்லவும் செய்கின்றன...


என் மூச்சு ஒரு நாள்
அதன் முகவரி தேடி வரும்
அப்போதாவது திறந்து வை
உன் இதயத்தின் கதவுகளை..

உன்னோடு பார்க்கவேண்டிய உலக
அதிசயங்கள் எல்லாமே எங்கே என்
அதிசயம் என்று கேக்கிறது அதற்கு
எப்படித் தெரியும் உன்னை நான்
சுற்றிச் சுற்றி ரசிப்பது...............

உன் நட்புக்காக இதயத்தில்
இடம் கொடுக்க பலர் உன்டு.....

உன் நட்புக்காக இதயம்...
கொடுக்க நர்ன் மட்டும் உன்டு.......

சாகடிக்கபடலாம் .... ஆனால் நான் தோற்க்கடிக்க படமாட்டேன்

காதலிக்கும்போது புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாது!!!!

என் கல்லறை வரும் வழியெங்கும்
முட்களை தூவுங்கள்....
ஒருவேளை அவளின் கண்ணீர்பட்டு
என் காதல் உயிர்த்தெழலாம்
எனக்கு விருப்பமில்லை
மீண்டும் இறந்துவிட...
மரித்தகாதல் மரித்ததாயிருகட்டும்....

No comments: