Friday, October 9, 2009

உன்னிடம் சொல்லிவிட்டேன்


உன்னிடம் சொல்லிவிட்டேன்
என்ற எண்ணத்தில்
நான் இருப்பதை விட..
நீ என்னை இன்னும் ஏற்றுகொள்ளவில்லை
என்கின்ற துக்கத்திலேயே
என் இதயம் இறந்துபோகிறது
தினமும்..

வாழ்வின் சுவையை
உன்னில் அறிய முயன்றேன்
இன்று...
கண்ணீரின் சுவையை
அறிந்துகொண்டேன்..
காதலும் கடலும்
ஒன்று தான்.
கடலில் முழ்கி
முத்தெடுப்பது போல
தான் காதலும்.

உன்கண்கள் கண்டேன்
என் இதயம் தொலைத்தேன்...
உன்கைகள்
என்கன்னம் தழுவிய
போது அன்பை உணர்ந்தேன்..
நீ என் அருகில் இருக்கும்
போதெல்லாம் என் நெஞ்சில்
சாரலை.. இருந்தாய்
இன்று தூரமாய் சென்றுவிடவே
என் நெஞ்சம் பாரமாய் அவதேனடி..

உன் காதுமடலை
கலைவடித்த அந்த பிரமனுக்கு
எப்படி நன்றி சொல்லுவேன்..
உன் செவ்விதழின் சிவந்த
நிறத்தை பார்த்து
ரோஜா கூட தவம்
கிடக்கும்.
தன் இதழில் வண்ணம் சேர்க்க.

உன்னருகில் நின்றபோது
இடமாறதுடிக்கும்
என் இதயம்
கரை தீண்டும் அலை
போல
உன் இதயத்தை வந்து வந்து
செல்கிறதே!

என் கன்னத்தை
உன் இதழால் ஈரமாக்குவாய்
என்று நான் கனவு கண்டபோது
ஈரத்தை உணர்ந்தேன்
உன் முத்தத்தால் அல்ல
என் கண்கள் விட்ட கண்ணீரால்

உன் பக்கத்தில் நிற்க்கவே
வெகுநேரம் நின்றேன்
வெகுநேரம் நின்றும்
உன் மௌனம் மலராத மொட்டகவே
இருந்தன.. உன் இதழ் பார்த்தே
என் பூக்கள் எல்லாம் வாடிபோனதடி..

பூக்களை கூட நேசிக்காதவன்
உன்னை பார்த்தும்
நேசிக்க தொடங்கினேன்........
பூக்களின் மென்மையை அறியாதவன்
உன்மனதின் மென்மையை அறிந்தேன்..
விழிகூட கேட்கிறது கண்ணீர்
வரும் நேரங்களில்
உன் மடிவேண்டுமென்று,,,,,,,,,,,
என் விழிமூடுமுன் வந்துவிடு
உன்முகத்தை பார்த்தேன்
விடைபெறுகிறேன்..
உன்னை விட்டு அல்ல
இந்த மண்ணை விட்டு......

No comments: