Thursday, December 24, 2009

உன் நினைவுகளின் துணையோடு......


உன்னை பிரிந்து
நாட்கள் கடந்து இருக்கலாம்
உன்னை மறந்து
ஒரு நிமிடமேனும் கடக்காது…..
இன்றுவரை உன்னை பிரிந்து
எத்தனையோ நாட்கள்
கடந்து விட்டேன்
உன் நினைவுகளின் துணையோடு.....

ஒரு பக்கம் நினைத்து பார்த்தால்
வேதனையாய் இருக்கிறது
மறு பக்கம் பார்த்தால் ஏனோ
மனம் அதையே விரும்புகிறது…

உறக்கம் முடிந்தாலும்
கனவுகள் மட்டும்
தொடர்கின்றது....
ஒரு வழியாய் கனவை
கலைத்து விடுவேன்
ஆனால் நினைவை
நான் நினைத்தாலும் ...
கலைக்க முடியாது….

உன் நினைவுகளை
சுமந்து கொண்டு
இருக்கும் இதயம்
உனக்கே சொந்தம்
வேறு பெண்ணையும் நினைக்காது....
உன் நினைவுகளின்
துணையோடு காலம் க
டப்பேன்.....!!

No comments: